தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் திடீர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் – வடமராட்சி கிழக்கு, மருதங்கேணிப் பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மூவரிடமும் வாக்குமூலம் பெற்ற பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply