சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளையே எல்லாவல தேரர் செய்கின்றார்!

சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் கரும வினைகளை எல்லாவல மேதானந்த தேரர் செய்கின்றார் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் இரத்தக்களரி ஏற்படுவதற்கு மதத்தலைவர்களே காரணம் எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

குருந்தூர் மலைப் பகுதியில் ஆலயங்கள் எவையும் இல்லை எனவும் குறித்த பகுதி பௌத்த பாரம்பரியம் எனவும் தேரர் கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

குருந்தூர் மலைப் பகுதியில், தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை எல்லாவல தேரர் உட்பட அனைத்து தேரர்கள் படிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பூர்வீகமாக பஞ்ச ஈச்சரங்களை கொண்டு தமிழர்கள் வாழ்ந்தார்கள்.

பிரபாகரனின் கொள்கைகளை தமிழக் கட்சிகள் பின்பற்றுவதாக எல்லாவல தேரர் குறிப்பிடுகின்றார்.

இவர் போன்றவர்களின் செயற்பாடுகள் சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடே எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இரத்தக்களரி ஏற்படுத்துவதற்கும் மதத்தலைவர்கள் தான் காரணம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply