நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக்குவதற்கு முயற்சி-மக்கள் கடும் எதிர்ப்பு!

நுவரெலியாவின் பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் தபால் தொழிற்சங்க ஊழியர்களும் நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்களும் பொது மக்களும் இணைந்துக்கொண்டுள்ளனர்.

குறித்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு முன்னால் ஆரம்பித்து நுவரெலியா மாவட்ட செயலகம் வரை சென்று தங்களது எதிர்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து எதிர்ப்பு பேரணி மீண்டும் நுவரெலியா பிரதான தபாலகம் அருகில் சென்று, தபால் தொழிற்சங்க தலைவர்களும் மத குருமார்களும் தங்களது எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கருத்துக்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெளிவுபடுத்திய பின் எதிர்ப்பு கூட்டம் அசம்பாவிதம் ஏற்படாதவண்ணம் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply