ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் கைது

ஹப்புத்தளையில் வைத்து ஊடகவியலாளர் மகேஷ்வரன் மீது தகாத வார்த்தை பிரயோகங்களைப் பாவித்து, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்பின்னர் குறித்த சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து, தலைமறைவாகி இருந்த குறித்த சந்தேக நபர் இன்று காலை ஹப்புத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply