ஓடும் ரயிலில் பாய்ந்து 24 வயது இளைஞன் தற்கொலை!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (23) இந்த சம்பவத்தில் கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த கயான் மதுசங்க என்கின்ற நபர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் கடுகதி ரயில் மோதியே அவா் உயிாிழந்துள்ளாா்.

இதேவேளை, உயிரிழந்த நபர் கடிதமொன்றை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்வும் அவா் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply