மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத கடற்பசு!

மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் கடல் பசு  ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இந்த பசு நேற்றைய தினம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மன்னார் வளைகுடா தோணித்துறை கடற்கரையிலேயே இவ்வாறு  இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க கடற்பசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய கடல் பசு சுமார் ஆயிரம்  கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் எனவும், உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை செய்த பின்னரே தெரியவரும் எனவும் இராமேஸ்வரம்  கால்நடை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply