ரணிலின் உயர் பாதுகாப்பு தொடர்பில் கசிந்த உள்ளகத் தகவல் – கைது செய்ய உத்தரவு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான உள்ளகத் தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் பொலிஸ் உள்ளக தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சி.ஐ.டியினருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை,  தகவல் வெளியாவதற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு, நாட்டிற்கு திரும்பும் போது உரிய பொலிஸ் அதிகாரிகளிற்கு இவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்படுவது வழமை.

எனினும் அந்த பொலிஸாருக்கு வழங்கப்படும் அவ்வாறான அறிவுறுத்தல்களை ஊடகங்களிற்கோ அல்லது தனிநபர்களிற்கோ அனுமதியின்றி வழங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தகவல்களை கசிய விட்டவர்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply