மதவாச்சியில் காட்டுயானை தாக்கி இளைஞன் பலி !

மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் அதிகாலையில் வயலுக்குச் சென்ற போது காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்டதுடன் , குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply