ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று(25) மாலை ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இளைஞர் நேற்று மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply