பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட 6 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

1997 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெடித்த வன்முறைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, 6 குற்றவாளிகளுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் வழங்கிய 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று  காலை இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

1997 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடம்பெற்ற வன்முறைச் செயற்பாடுகளின் போது வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்தமைக்காக இரத்தினபுரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுகத் திஸாநாயக்க உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

பின்னர், 2007 ஆம் ஆண்டு, இரத்தினபுரி மேல் நீதிமன்றம், குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

பின்னர், உயர் நீதிமன்றத் தீர்ப்பை செல்லுபடியாக்க உத்தரவிடக் கோரியும், உரிய குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் அவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் முதல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, பிரதிவாதிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

குற்றவாளிகள் முன்வைத்த இரண்டாவது மேன்முறையீட்டை நிராகரித்த உச்ச நீதிமன்றம், சிறைத்தண்டனையை இன்று முதல் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply