திருகோணமலையில் அதிகாலையில் பதற்றம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

திருகோணமலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை  குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியிலேயே குறித்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயம் அடைந்த இருவம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply