தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்னும் நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

அவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply