அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றும் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார் ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது..

காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த நிஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு இவர்கள்தான் காரணம் என்ற வசனங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் இந்த இரண்டு அதிகாரிகளுடன் படங்களுடன் அவுஸ்திரேலியாவின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

கனடாவில் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவிலும் தங்களின் இருப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு, அவுஸ்திரேலிய அரசை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply