பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர்

பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில்  கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி பிரான்ஸிற்குச் செல்லவுள்ளார்.

இந்நிலையில், இந்திய இராணுவத்தினர் பிரெஞ்சு படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் எனவும், அணிவகுப்பில் ரபேல் விமானங்களும் வர வேண்டும் என்றும் பிரான்ஸிக்கான இந்தியத் தூதர் லெனாயின் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட நாளாக பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

பிரான்சுக்கும் இந்தியாவுக்குமான நட்புறவின் வெள்ளிவிழா ஆண்டாகவும் இது அமைந்துள்ளது.

இதனிடையே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த விடயங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply