விருந்தினர் விடுதியில் திடீர் சுற்றிவளைப்பு – இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது! வவுனியாவில் சம்பவம்

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த விருத்தினர் விடுதியில் விபசாரம் இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

அதன் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியில் திடீர் சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது விபசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும் , போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் விபசாரத்திற்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்கள் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் விபசாரமானது முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரியின் பின்னணியில் இயங்குகின்றமை பொலிஸார் விசாரணைகளின் வெளியாகியுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply