யாழில் ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கொடூரம்!

யாழ். வலிகாமம் வலய பாடசாலை ஒன்றில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையை உயர்த்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் மருந்தகம் ஒன்றில் வலி நிவாரணி மருந்துகளை வாங்கிப் பூசியுள்ளனர்.

பாடசாலை விட்டு மாணவி வீடு சென்ற நிலையில் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமது மகள் கையை உயர்த்த முடியாமல் அவதிப்படும் நிலையை அறிந்த பெற்றோர் யாழ். போதனா வைத்தியசாலையில் மகளை அனுமதித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply