கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – மனிதப் புதைகுழி தொடர்பில் கஜேந்திரகுமார்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமது உறவுகளும் இருக்கலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச விதிமுறைகளைக் கடைப்பிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்களின் உதவிகளையும் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply