புதிய பொலிஸ்மா அதிபர் யார்! இன்று இறுதி தீர்மானம்

புதிய பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

அந்த கலந்துரையாடலின் போது புதிய பொலிஸ்மா அதிபர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொலிஸ்மா அதிபராக இருந்த சி. டி. விக்ரமரத்ன கடந்த மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு மூன்று மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கினார்.

03 மாத சேவை நீட்டிப்பு ஜூன் 25 அன்று முடிவடைந்தது.

இதன்படி, குறித்த கால அவகாசம் முடிவடைந்து 13 நாட்கள் கடந்துள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply