மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்தின!

பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

பொலிஸ்மா அதிபராக இருந்த சி. டி. விக்ரமரத்ன கடந்த மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு மூன்று மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கினார்.

03 மாத சேவை நீட்டிப்பு ஜூன் 25 அன்று முடிவடைந்தது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து சி.டி.விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply