மன்னம்பிட்டி விபத்து தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் அப்பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலன்னறுவ போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படும் நிலையில், காணாமல் போனோரைத் தேடும் பணிகள் இன்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்றிரவு 8 மணியளவில் விபத்திற்குள்ளான பேருந்தில் பயணித்த 10 பேர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply