இலங்கையை வந்தடைந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா  உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.

இவர் இரண்டு நாட்கள் உத்யோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு அவர் கட்டுநாயக்க விமானம் நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார்.

இதன் போது ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளார்.

அதேவேளை, அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியினுள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply