பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

பொருளாதார நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வழங்கப்படவுள்ள கடன் தொகையில் 1.2 பில்லியன் டொலர்கள் உடனடியாக வழங்கப்படும் என்றும், மீதமுள்ள  பணம் தவணை முறையில் வழங்கப்படும் என  சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழு தெரிவித்தது,

இதனிடையே, பாகிஸ்தான் சவாலான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முறையே 2 பில்லியன் டொலர் மற்றும் 1 பில்லியன் டொலர்களை பாகிஸ்தானின் பிரதேச வங்கியில் வைப்பிலிட்ட பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply