பிரான்ஸ் பறந்தார் இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சந்திப்பின்போது, இந்தியப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மோடி பிரான்ஸில் உள்ள தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply