மோடிக்கு உயரிய விருதை வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தார்.

இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு பிரான்ஸ் அரசால் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தேசிய தின நிகழ்வில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் மோடிக்கு இந்த விருதுடன் கூடிய பதக்கமானது மேக்ரனால்  அணிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை மோடிக்குக் கிடைத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply