மருந்துப் பொருட்களின் கிடைப்பனவுத் தன்மை தொடர்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் – ஜனாதிபதி

மக்கள் மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படாது என்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும் எனவும் நாட்டில் உள்ள அனைத்து மருந்து மருந்துகளுக்கும் வெளிப்படைத்தன்மை தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் அனைத்து இணையத்தளங்களும் மருந்துகளின் மொத்த அளவு மற்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கிடைக்கும் மருந்துகளின் அளவு ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த வலையமைப்பு முறையானது மருத்துவமனைகளுக்கிடையில் மருந்துகளை பரிமாறிக்கொள்வதற்கு உதவும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று நடைபெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply