மட்டகளப்பில் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

தந்தை மற்றும் மாமனாரால் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட  சம்பவம்  மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தாயார் கடந்த 3 மாதத்திற்கு முன்னர்  உயிரிழந்துள்ள  நிலையில் 49 வயதுடைய தந்தையும் 52 வயதுடைய மாமனரும் இணைந்து சிறுமியை இவ்வாறு கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து  இருவரையும் எதிர்வரும் 27ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply