நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் – சஜித்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அவர் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அமைச்சர் கெஹெலியவுக்கு எதிராக குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply