டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்த சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், இதனை ஆதரிக்கும் எவருடனும் கூட்டணி அமைக்க சுதந்திர மக்கள் சபை தயாராகி வருவதாகவும் தெரியவருவதோடு இது குறித்தான விடயங்களை எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவள தெரிவித்துள்ளார்.

டளஸ் அழகப்பெரும நாட்டின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்க தகுதியானவர் எனவும் ஊழல்,மோசடிகளில் சம்பந்தப்படாத நபர் எனவும் இதனால், அவரை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply