நாட்டை பிரிக்க முயலும் புலம்பெயர் தமிழர்கள் – கொந்தளிக்கும் சிங்கள ராவய!

கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல விடுதலைப்புலிகளே எனவும்,  அவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.

பொரளை பொதுமயானத்துக்கு அருகில் கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவேந்தல் நேற்று கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சிங்கள ராவய  அடைப்பினர் அவ்விடத்தில் குழப்பம் விளைவித்திருந்தனர்.

இதன்போது “புலம்பெயர் தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முயல்கின்றார்கள் என குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்று இப்படியான நினைவேந்தல்களை இங்கு செய்யவேண்டாம் என கோசம் எழுப்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply