ஆப்கானிஸ்தானில் தொடர் மழை – வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்துவருகின்றது.

தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 40 க்கு மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தில் சிக்குண்டோரை மீட்கும் பணிகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வெள்ளப் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் ஆப்கானிய மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply