இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் லொறி விபத்து – மூவர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் பேருந்து நிலையத்துக்கு முன்னால் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியோரமாக உணவு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply