தொடரும் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்து மீறல்!

இந்தியா தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்றைய தினம் இரவு தமிழக கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து சென்று விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply