யாழில் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் முரண்பாடு!

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்று காலை மாணவர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பாடசாலை மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் வேற்று மதம் சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply