இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு வேலைத் திட்டம்

இலங்கையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக  சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக அமைவது புற்றுநோய்.

பதிவாளர் திணைக்களத்தின் தரவுகளுக்கு படி, 2019 ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 599 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர், 2020 இல், 37 ஆயிரத்து 649 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் நாங்கள் மிகப்பெரிய அதிகரிப்பைக் காண்கிறோம். ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் வாய் புற்று நோயே அதிகளவில் காணப்படுகிறது. எனக்கு தெரிந்தவரை புகையிலை பயன்பாட்டை குறைக்க போதிய திட்டங்கள் இல்லை. எனவே நம் நாட்டில் புகையிலைக்கு எதிராக அதிக வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply