ஒரே இரவில் சேதமாக்கப்பட்ட தேவாலயங்கள் – யாழில் பரபரப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு தேவாலயங்கள் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதோடு, நான்கு தேவாலயங்களிலும் மாதா சிலைகளே சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யதுள்ளனர்.

முறைப்பாடுகளையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply