திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் இ.போ.ச பணியாளர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையின் குறிப்பிட்ட சில சாலையின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபிட்டிகொல்லாவ மற்றும் கந்தளாய் ஆகிய சாலைகளின் பணியாளர்களே பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஹொரவபொத்தான சாலையின் பரிசோதகர் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றிற்குள் அழைத்துச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திடீர் வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை பல்வேறு தேவைகளுக்காக பயணிக்கவிருந்த பயணிகள் பலர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply