மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த நபர் கைது!

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த மொரட்டுவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து செல்லும் வழியில் சந்தேக நபர் சில காலமாக கேரள கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து கேரள கஞ்சா பொட்டலங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply