துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் இன்று காலை சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞருக்கு அருகே கட்டுத் துப்பாக்கியும் அவரின் மோட்டார் சைக்கிளும் காணப்பட்ட நிலையில் இதனை அவதானித்த மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply