கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுமி! விசாரணைகள் முன்னெடுப்பு!

குளியல் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மல்வானே பகுதியில் பதிவாகியுள்ளது.

மல்வானே, வல்கம பிரதேசத்தில் தனது தாயுடன் வீட்டில் இருந்த சிறுமி வீட்டின் பின்புறமுள்ள குளியல் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கே.பி திமாஷி ஜனித்மா மதுஷங்க என்ற மூன்று வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பியகம மரண விசாரணை அதிகாரி டொக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் மரண விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply