தம்புத்தேகமவில் வான் – லொறி விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்  முன்னதாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வான் ஒன்று  அதே திசையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறமாக மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வானில் இருந்த 8 பேர் காயமடைந்த நிலையில், தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 36, 43 வயதுடைய இரு பெண்களும் 26, 46 வயதுடைய இரு ஆண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, விபத்தில் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காயமடைந்த மூவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

வானை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என பொலிஸ்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் சாரதி தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply