மதவாச்சியில் நிறைவுபெற்ற மலையகம் 200 நடைபவனி!

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடைபவனி, மதவாச்சியை சென்றடைந்துள்ளது.

வவுனியா – செட்டிக்குளம் பகுதியிலிருந்து இன்று காலை ஆரம்பமான இந்த நடைபவனி இன்று மதியம் மதவாச்சியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியும் இன்றைய தினம் மதவாச்சியை சென்றடையவுள்ளது.

இதனையடுத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் மதவாச்சியில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை மேற்கொள்ளப்படும் நடைபவனி நாளைய தினம் மிஹிந்தலையை சென்றடையவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply