பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படை பயிற்றுவிப்பகம், சீனக்குடாவில் விமானிகளைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுத்தப்படும் PT6 விமானம் இன்றுகாலை சீனக்குடா விமானப் பாதையில் இருந்து விமானப் பரிசோதனைக்காக புறப்பட்டதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியது.

எவ்வாறாயினும், முற்பகல் 11.27 மணியளவில் குறித்த விமானம் சீனக்குடாவில் உள்ள விமானப்படை முகாமுக்கு அருகாமையில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இரு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக ஏற்கனவே விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply