வேலன் சுவாமி உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகளுக்கு கிளிநொச்சி பொலிஸாரால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இன்றைய தினம் காலை 9 மணிக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குஙறித்த அழைப்பாணையில்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அதற்கமைய கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த வேலன் சுவாமிகள், சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply