கந்தானை இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் தீ விபத்து – ஒருவர் பலி

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் இன்று  காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை வீதி மாவத்தை பகுதியில் குறித்த தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இறந்தவர் 45 வயதுடைய குறித்த நிலையத்தின் கணக்காளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply