இம்ரான் கானுக்கு தடையுத்தரவு பிறப்பிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தோஷக்கானா வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்திலும் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்யக் கோரி இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply