போர்த்துக்கலில் காட்டுத் தீ – மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

போர்த்துக்கல் நாட்டின் அலென்டெஜோ பிரதேசத்தில்  காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் இருந்து ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஒடெமிரா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, அங்குள்ள பிரபல சுற்றுலா தளங்களுள் ஒன்றான அல்கார்வ்வை நோக்கி பரவி வருகிறது.

இதுவரை சுமார் 6,700 ஹெக்டேர் காடுகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீயை அணைக்கும் பணியில் 800 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply