போலி பத்திரம் தயாரித்ததற்காக வழக்கறிஞர் தகுதி நீக்கம்

போலிப் பத்திரம் தயாரித்து நோட்டரி விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மத்திய மாகாண உயர் நீதிமன்ற பதிவாளர் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த சட்டத்தரணிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அதன்படி, 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி போலிப் பத்திரம் தயாரித்து நோட்டரி கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக சட்டத்தரணி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பின், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரது பெயரை வழக்கறிஞர் கோப்பகத்தில் இருந்து நீக்குமாறு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply