நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள்!

நாட்டிற்கு பற்றாக்குறையாகவுள்ள 14 வகையான மருந்து வகைகளை இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் நிலவிய மருந்து பற்றாக்குறை 242 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் அதிக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் அடுத்த மாதத்திற்குள் நாட்டுக்கு வந்து சேரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply