கஜேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட விரையும் குழு – குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேரர் தலைமையிலான குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அண்மையில் கூறியிருந்தார்.

சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதன், ஆரம்பமாக கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்திருந்தார்.

ஆகவே இந்த போராட்டத்தில் அனைத்து சிங்கள பௌத்தர்கள் மற்றும் இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply