இனவாதத்தால் ஆட்சியை பிடிக்க முயற்சிப்போர் கடந்த கால வரலாறுகளை மறக்கக் கூடாது!

இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற எத்தனிப்பவர்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ஆட்சியை எந்தத் தரப்புக்கு வழங்குவதென நாட்டு மக்களே முடிவு செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டு மக்களை எவரும் முட்டாள்களாக்க முடியாது எனத் தெரிவித்த ஜனதிபதி, ஜனநாயகவாதிகளையும், இனவாதிகளையும் மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply